விசாரணைகள் முடிவடைந்ததும் குற்றச்சாட்டுகள் மீதான உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
விளையாட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பிலான பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த இவர் சுமார் 09 மணிநேரம் வாக்குமூலம் வழங்கினார்,
9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த குமார் சங்கக்கார,
ஐ.சி.சி தலைவர்பதவிக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, அதற்கு வேறு விதமான நடைமுறைகள் உள்ளன,
எனினும் தற்போது நான் ஐ.சி.சி தலைவர்பதவி குறித்து சிந்திக்கவில்லை அதனைவிடமுக்கியமான வெறு ஒரு விடயம் எனக்கு உள்ளது என்றார்.
எதனையும் செய்வதற்கு எனக்கு அதிக காலம் இல்லை. முதலில் எனக்கு இருக்கும் முக்கிய பொறுப்புகளை நான் சரியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
0 Comments