ஸ்ரீலங்காவில் மேலும் 87 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட அனைவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்றை தினத்தில் மாத்திரம் இதுவரையில் 283 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 339 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 283 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments