பிரபல போதை பொருள் வர்த்தகரான கஞ்சிபானை இம்ரான் சிறைவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கையடக்கத் தொலைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளனர்.
போன் ஜேமர் மற்றும் STF பாதுகாப்பையும் மீறி கஞ்சிபானை இம்ரானின் சிறைகூடத்திற்கு மொபைல் போன் எவ்வாறு சென்றது என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பூஸா சிறைச்சாலை அதிகாரிகள் குழு ஒன்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து நேற்று பாரிய குற்றங்களை இழைத்த கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடங்களில் விசேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது காஞ்சிபனை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து எண்ட்ரோட் ரக கையடக்க தொலைப்பேசி மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிம் அட்டைகள் இரண்டும் மற்றும் கையடக்க தொலைப்பேசிக்கு பயன்படுத்தும் சார்ஜரும் மீட்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
இதற்கு முன்னரும் கஞ்சிபானை இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்தில் இருந்து கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பல உபகரணங்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மீட்டிருந்தனர்.
0 Comments