வவுனியா - புளியங்குளம் சன்னாசிபரந்தன் பகுதியில் மாட்டுடன் மோதிய மகிழுந்து கடுமையான சேதமடைந்துள்ளது.
இன்றையதினம் காலை 10 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கி வந்த மகிழூந்து வீதியின் எதிரே சென்ற மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் குறித்த மகிழூந்து முழுமையாக சேதமடைந்த நிலையிலும் அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments