அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 89 இலட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி மனித குலத்திற்கே பெரும் சவால் விடுத்து வருகிறது.
கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டறியும் பணியில் உலகின் முன்னணி நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டாலும் இழப்பும் பாதிப்பும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இதேவேளை உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 89,06,655 ஆக அதிகரித்துள்ளது.
பலியானோரின் எண்ணிக்கை 4,66,253 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து 47,32,888 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. இந்தப்பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் தொடர்ந்தும் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
0 Comments