மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று காலை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளனி பற்றாக்குறையை பூர்த்திசெய், வைத்தியர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய் , நியமனங்களில் அரசியல் தலையீடு வேண்டாம் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் தேவைகளை பூர்த்தி செய். போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பட்டத்தின் போது அதிகளவானோர் ஒன்று கூடியதால் சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த லைத்தியசாலையில், 53 வைத்தியர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 14 வைத்தியர்களே கடமையாற்றுவதகவும் புதிதாக கடமையேற்று வரும் வைத்தியர்கள் அரசியல் செல்வாகினைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செல்வதாகவும் போராட்டக்காரர்கள் விசனம் தெரிவித்தனர்.
மேலும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பௌதீக வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியர் பற்றாக்குறை நீன்டகாலமக நிலவி வருவதாகவும். இதனை தீர்த்து வைக்க உரியவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், களுவஞ்சிக்குடி பிரதேச பொது அமைப்புக்கள் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு உட்பட முக்கிய சிகிச்சை பிரிவுகள் அமைக்கபட்டுள்ள நிலையிலும் வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் சிகிச்சையளிக்க முடியாதமையால் மூடப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
அத்துடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலை வரும் நோயாளிகள் நீண்ட நேரம் வைத்தியசாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதன் காரணமாக நீண்ட நேரம் காதிதிருந்தும் அதிகளவான நோயாளிகளுக்கு சிக்கிச்சையளிக்க சந்தர்ப்பம் இல்லாத நிலமை காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியசாலையின் வைத்தியார் பற்றாக்குறையை அரசாங்கம் கருத்தில் கொண்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் அதன் போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments