ஜனாதிபதித் தேர்தலில் செய்ததைப் போலவே தற்போது பொதுத் தேர்தல் பிரசாரத்திலும் சிலர் இனவெறியைத் தூண்ட முயற்சிக்கின்றனர் என இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் குற்றம் சாடியுள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இனவெறியைத் தூண்டுவது அரசியல்வாதிகளின் ஆதரவின்மையை வெளிக்காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான இனவெறியைத் தூண்டுவோர் அவர்களின் இயலாமையைக் காட்டுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை முன்னேற்ற அனைத்து சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் இவ்வாறு நாட்டில் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை வன்மையாக கண்டிப்பதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments