வவுனியா ஓமந்தை பகுதியில் இளைஞன் ஒருவரிடமிருந்து இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் 6கிலோ 400கிராம் கஞ்சா மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியங்குளம் இராமனூர் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றில் ஓமந்தை பனிக்கர்புளியங்குளம் பகுதியில் சென்ற இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது அவரது உடமையிலிருந்து 6கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
ஓமந்தை பறநாட்டங்கல் பகுதியை சேர்ந்த 29வயதுடைய இளைஞனை கைது செய்த படையினர் ஓமந்தை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 Comments