யாழ். நாயன்மார்கட்டு பகுதியால் வாள் வெட்டு தாக்குதல் நடத்த சென்றவர்களை இராணுவம் மடக்கி பிடித்துள்ளது.
இன்று மாலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுதாவது
குறித்த பகுதியால் 7 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழிமறித்துள்ளது.
இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளும் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்தவர்களே இதன்போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments