இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் நேற்று சனிக்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூவர் உயிரிழந்தும் மேலும் மூவர் படுகாயமடைந்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என இங்கிலாந்து பொலிஸார் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து பயங்கரவாத தடுப்பு பொலிஸ் பிரிவு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய நபர் கைரி சாதல்லா என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என இன்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நபர் லிபியாவிலிருந்து இங்கிலாந்திற்கு அகதியாக வந்துள்ள நிலையில் இங்கிலாந்தில் குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments