தமிழரசுக் கட்சியின் வீடு இன்று புத்தெடுத்து விச நாகங்கள் சூழ்ந்து எல்லாமே அழிந்து போகின்ற நிலையில் ஏனையவர்களை வீட்டுக்குள் கூப்பிடுவது நகைச்சுவையானதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் பல ஏமாற்றுக் கதைகளை கூறுவது சகஜம். ஒரு வகையில் அந்த வீட்டுக்குள் அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் என்ற அடிப்படையில் எனக்கு கூடுதலாகவே தெரியும்.
இன்றையதினம் யாழ். திருநெல்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்களை மீள இணைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
0 Comments