வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வேட்பாளர்களால் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களை தடுக்க தனக்கு அதிகாரம் இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதேவேளை 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25 ஆம் திகதி வீடுகளில் காட்சிப்படுத்தப்படும் பத்திரங்களை அச்சிட்டு முடிக்க எதிர்பார்த்துள்ளோம்.
வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றில் ஒளி, ஒலிபரப்பாகும் செய்திகளில் வேட்பாளர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments