எதிர்வரும் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை!
எனக்கு யாரும் ஒட்டு போட வேண்டாம்
என மங்கள சமரவீர அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் சஜித் அணியில் தாக்கல் செய்த வேட்புமனுவையும் வாபஸ் வாங்கி உள்ளார்.
.நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த முடிவை நான் எடுத்துள்ளேன்.
அது அரசியலில் இருந்து நான் முற்றாக ஒதுங்கியதாக அர்த்தமில்லை.
இதுவரை காலம் எனக்கு வாக்களித்து ஆதரவளித்த மக்களுக்கு நன்றி.உங்களுடன் நான் இருப்பேன். எனது பெயர் வாக்கு சீட்டில் காணப்பட்டாலும் அதற்கு யாரும் வாக்களிக்க வேண்டாம்.
இது தொடர்பில் நான் சஜித் பிரேமதாசா மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளேன்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மாத்தறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவிப்பு.
0 Comments