இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அண்மையில் தென்னிலங்கை சிங்கள் ஊடகம் ஒன்றிற்கு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் செவ்வி ஒன்று வழங்கியிருந்தார்.
அதில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் விடுதலைப்புலிகளின் போராட்டம் தவறபனது எனவும் தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையிலேயே இயக்குனர் களஞ்சியம் உருவப்படத்திற்கு செருப்பால் அடித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
தன்னுடைய இந்த செயற்பாடானது அநாகரிகமான செயற்பாடு அல்ல எனவும் ஜனநாயக போராட்ட வடிவத்திலென்று எனவும் தெரிவித்திருந்தார்.
இந்திய இலங்கை உறவு தொடர்பிலும் தற்போதைய இலங்கை அரசியல் களம் குறிப்பாக தமிழ் நாட்டில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பிலும் எம்முடன் பல தகவல்களையும் இலங்கைத் தமிழர் தொடர்பான உணர்வுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments