வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் வீட்டு கிணற்றில் இருந்து வெடிபொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நீண்டகாலத்தின் பின்னர் வீட்டின் உரிமையாளர் இன்று துப்புரவுசெய்துள்ளார்.
இதன்போது குறித்த கிணற்றில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இரண்டு ஆர்பிஜி ரக செல்லினையும், ஒரு மோட்டார் செல்லினையும் மீட்டனர். மீட்கப்பட்ட வெடிபொருட்கள் நாளையதினம் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments