சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 58 ஆவது ஜனன தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாகவுள்ள அவரது சிலை முன்னால் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் கலந்து கொண்டு கணவரின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அஞ்சலி நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments